இந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், “ இந்தப் படத்துக்கு எனக்கு சரியாக சம்பளம் வந்திருச்சு கமல் சார். அதுவும் ரொம்ப சீக்கிரமாகவே வந்திருச்சு. இப்படியான விஷயங்கள் நடக்கிறதெல்லாம் அரிதான விஷயம். என்னோட படங்கள் ரிலீஸுக்கு முன்னாடி நாள் நான் அன்பு செழியன் அண்ணன் ஆஃபீஸ்லதான் இருப்பேன். இங்க சம்பளம் கொடுக்காமல் இருக்கிற குரூப் மட்டுமில்ல வாங்கின சம்பளத்தை பிடிங்கிட்டு போகிற குரூப்பும் இருக்கு.
உங்களுக்கு தெரியாத விஷயங்கள் இல்ல சார். நீங்களும் பலவற்றை கடந்து வந்திருப்பீங்க. எனக்கு படம் ரிலீஸுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடியே சம்பளம் கொடுத்து மரியாதையும் கொடுக்கிறதெல்லாம் ரொம்ப அரிதான ஒன்று. கமல் சார், நீங்க எப்படிப்பட்ட நடிகர்னு உலகத்துக்கே தெரியும். உங்களைப் போல நடிக்க இன்னொருத்தர் பிறந்து வரணும்னு சொல்வாங்க. ஆனால், இன்னொருத்தர் பிறந்து வந்தாலும் உங்களை மாதிரி நடிக்க முடியாது. `விக்ரம்’, `அமரன்’ முடிஞ்சு `தக் லைஃப்’ திரைப்படம் ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கேன். உங்களை `உலக நாயகன்’னு கூப்பிட வேண்டாம்னு சொல்லிட்டீங்க. சரி, வேறென்ன சொல்லிக் கூப்பிடலாம்னு நினைக்கும்போதுதான் மணி சார் `விண்வெளி நாயகன்’னு சொன்னாரு. எதுக்கு உலகம்னு சுருக்கணும். விண்வெளினே சொல்லிடலாம்.” என்றவர், “ இந்தப் படத்துல நான் சாய் பல்லவிக்கு ஸ்பேஸ் கொடுக்கிறதுலாம் இல்ல.



