அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை! rain

0
11
Advertisement


இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (மாலை 4 மணி வரை) திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு அரபிக்கடலில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய ‘சக்தி’ தீவிர புயல், தெற்கு திசையில் நகர்ந்து திங்கள்கிழமை(அக்.6) காலை வலுகுறைந்து புயலாக அதே பகுதிகளில் நிலவியது.

இது, மேலும் கிழக்கு-தென்கிழக்கே மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு அரபிக்கடலில் நகர்ந்து, இன்று(அக்.7) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுகுறையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 2 =